Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரனை அடுத்து செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு பயணம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (10:01 IST)
சந்திரனை அடுத்து செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு பயணம் செய்யும் திட்டம் இந்தியாவுக்கு உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் சந்திரனில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக இறங்கியது என்பதும் அதிலிருந்து ரோவர் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், சந்திரனை அடுத்து செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு பயணம் செய்யும் திட்டம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் இதற்கு அதிக முதலீடு தேவை என்று தெரிவித்தார். 
 
விண்வெளி துறை வளர்ச்சி அடைவதன் மூலம் முழு தேசமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அதுதான் எங்கள் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும் பிரதமர் மோடி எங்களுக்கு கொடுத்த இலக்கை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments