வலுவிழக்கப் போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:36 IST)

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அது மெல்ல வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆனால் இது புயலாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளதாக கூறப்பட்டது.

 

தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வந்த இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழையும், ஆந்திரா பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments