Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்புத்திரை' இயக்குனரின் தாய் சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (09:46 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு குறித்த வழக்கு ஒன்றில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்  கவிதா என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.

தற்போது கவிதா ஜாமீனில் வந்துள்ள நிலையில் இவரை இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவிதா என்பவர் விஷால் சமந்தா நடித்த 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசு அதிகாரி குற்றவழக்கில் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்திற்குள் அவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்ற விதி இருக்க அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் கவிதாவுக்கு சாதகமாக செயல்பட்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் கேள்விக்கு பின்னர் தற்போது கவிதா முன் தேதியிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments