Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:44 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வட மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த நிலையில் ஆந்திராவின் கிழக்கு பகுதியில் சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மையம் இருப்பதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஓடிஸா மட்டும் மேற்குவங்க கடற்கரையை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன் பின்னர் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வழியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீட் பெல்ட், செல்போன் சார்ஜிங்.. முதல்வர் இன்று ஆரம்பித்து வைத்து மின்சார பேருந்தில் என்னென்ன வசதிகள்?

10 வயது மகனுக்கு கத்திக்குத்து.. அதன்பின் தவறை உணர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்ற தந்தை..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி..300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?

தொடர் சரிவில் தங்கம் விலை.. 10 நாட்களில் 2500 ரூபாய் குறைவு.. இன்னும் குறையுமா?

டேட்டிங் செயலியில் கணக்கு தொடங்கிய 63 வயது முதியவர்.. சில நாட்களில் வாழ்நாள் சேமிப்பு ரூ.66 லட்சத்தை இழந்த பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments