Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்- மகன் உடல் கருகி பலி: கள்ளக்குறிச்சியில் சோகம்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (13:28 IST)
கள்ளக்குறிச்சியில் தாயும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
 
சரவணன் மாற்றுதிறனாளி என்பதால் தனது பெற்றோர்களுக்கு வரும் பென்சன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். 
 
நேற்று வழக்கம் போல சரவணனும் அவரது மகளும் வீட்டின் பின் பகுதியில் உள்ள அறையில் தூங்கினர். கனகாவும் அவரது 6 மாத ஆண் குழந்தையும் வீட்டின் முன் அறையில் தூங்கினர். அப்போது நள்ளிரவு தீடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கனகாவும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியானார்கள். சரவணன் அவரது பெண் குழந்தையுடன் வீட்டின் பின் அறையில் இருந்ததால் உயிர் தப்பினர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீ விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது பழிவாங்கும் காரணமாக நடந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments