Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மட்டும் அம்மா ஸ்கூட்டருக்கு 23 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (08:26 IST)
அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி தினம் என்பதால், ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை வழங்கினர்.

இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். இத்திட்டத்தில் பெண்களுக்கு இருச்சக்கர வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 
அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்காக ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிகப்பட்டு வந்தன. நேற்று கடைசி தினம் என்பதால், ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை வழங்கினர்.
 
சென்னையில் கடந்த 2-ந் தேதி வரை 6,187 பெண்களும். இறுதி நாளான நேற்று 16,773 பெண்களும் அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 22,960 பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
 
விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி நாளை முதல் 10-ந் வரை நடைபெறுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி 15-ந் தேதி நடக்கிறது. தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு வரும் 24-ந் தேதியான ஜெயலலிதா பிறந்த நாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments