Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம்!

bhavadharani
Sinoj
சனி, 27 ஜனவரி 2024 (20:36 IST)
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி  சிறுநீரக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
 

அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,நடிகர் சிவகுமார், விஷால், சிம்பு, விஜய் ஆண்டனி, ஷோபனா சந்திரசேகர், மணிரத்னம், மிஷ்கின், உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.   

உறவினர்கள்,  பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அதன்பின்னர், இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments