Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் பேசிய மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை !

Advertiesment
CHENNAI

Sinoj

, சனி, 27 ஜனவரி 2024 (16:44 IST)
தமிழில் பேசியதால் மாணவரை ஆசிரியை ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில்  நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நாயகி என்பவர், அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவன் தமிழில் பேசியதால் ஆத்திரம் கொண்டு அவரது காதைப் பிடித்துத் திரிகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும்  நிலைக்குத் தள்ளப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது ராயபுரம் போலீஸார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரீல்ஸ் வீடியோவுக்காக சிறைக்கு சென்ற நபர்!