Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டீஸின் நோக்கம் எஸ்பிபி அல்ல. இளையராஜா காப்புரிமை ஆலோசகர் விளக்கம்

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (06:46 IST)
இளையராஜா-எஸ்பிபி காப்புரிமை விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்திற்குரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இரு தரப்பினர்களும் தங்களுடைய விளக்கத்தை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் இளையராஜாவின் இந்த நடவடிக்கை தவறு என்றே கூறி வருகின்றனர்.



 


இந்நிலையில் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:  

எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments