Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22ஆம் தேதிக்கு பின்னர் பன்னீர்செல்வம் பேசமாட்டார். டிடிவி தினகரன்

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (06:27 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சசிகலா அணியின் சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைதேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது., இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த குழுக்களில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் பா. வளர்மதி உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன். 100 சதவீதம் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இரட்டை இலை சின்னம் குறித்து  பன்னீர்செல்வம் 22-ம் தேதி வரைதான் பேசுவார். அதன்பின்னர் பேசமாட்டார். மேலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் எனக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments