Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி ஆசையிருந்தால் நானே முதல்வராகியிருப்பேன்; டிடிவி தினகரன்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (17:36 IST)
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
திருப்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
 
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது எடப்படி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். சசிகலா சிறை சென்ற பின் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர்தான் என்னை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 
 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கச் சென்றபோது தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்றனர். எனக்கு பதவி ஆசை இருந்தால் நான் முதல்வராகியிருப்பேன். ஆனால் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்றார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்