Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை: சேகர் ரெட்டி

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (18:05 IST)
பிரபல ஆங்கில சேனல் டைம்ஸ் நெள, சேகர் ரெட்டியின் டைரி என்ற ஒரு ஆதாரத்தை இன்று வெளியிட்டது. இதில் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த டைரி குறித்து சேகர் ரெட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார். நான் யாருக்கும் பணம் ஏதும் தரவில்லை; பிறருக்கு பணத்தை தர வேண்டிய அவசியமும் இல்லை.  வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடைய தொழில்களில் இருந்து வந்தவையே. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திருப்பதி உட்பட 2 இடங்களில் மட்டுமே பார்த்துள்ளேன்

எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை டைரியில் உள்ளது யார் எழுதியது என்பது தெரியவில்லை, அது எனது கையெழுத்து இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் என்னுடைய வீட்டில் இருந்து எந்த ஒரு டைரியையும் கைப்பற்றவில்லை. நாடு முழுவதும் நாங்கள் நேர்மையான முறையில் தொழில் செய்து வருகிறோம், அனைத்துக்கும் முறையான கணக்கு உள்ளது. மேலும் வருமான வரி முறையாக செலுத்தி வருகிறோம்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி..!

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments