அத்திவரதரை தரிசித்த வரிச்சியூர் செல்வம் – விவிஐபி பாஸ் கொடுத்தது யார் ?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (14:14 IST)
அத்திவரதரை விவிஐபி பாஸில் சென்று பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வழிபட்டது எப்படி என சர்ச்சைகள் எழுந்துள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். அத்திவரதரை சந்திக்க பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோர் விஐபி வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நேற்று விஐபி வரிசையில் வரிச்சூர் செல்வம் என்ற பிரபல ரவுடி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டை கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அவர் குடியரசுத்தலைவர் அமர்ந்து தரிசித்த அதே இடத்தில் அமர்ந்து வழிபாடு செய்தது எப்படி என்றும் அவருக்கு விவிஐபி பாஸ் கொடுத்தது யார் என்றும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையி இப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மூலமே அந்த பாஸ்கள் வழங்கப்பட்டதாகவும், பொன்னையாவுக்கு துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments