Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் சிறுமி உயிரிழப்பு! – உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:54 IST)
ஆரணியில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த வழக்கில் உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ஆரணி காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் அசைவ உணவு சாப்பிட்ட 12 பேர் வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கெட்டுபோன உணவு பொருட்களை சேர்த்ததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் உணவக உரிமையாளர் மற்றும் சமையல்காரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments