Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அநீதியான நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:39 IST)
இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் இது அநீதியானது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வுக்கு கடந்த சில ஆண்டுகளாக பலமான எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக ஆட்சியமைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டாலும் நடப்பு ஆண்டில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

இன்று நடப்பு ஆண்டு நீட் தேர்வு தொடங்கும் நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments