Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்.15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..! எதற்காக தெரியுமா..?

Senthil Velan
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (15:45 IST)
தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
 
இதனிடையே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.
 
இந்நிலையில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: தண்ணீர் இருக்கிறது.! கொடுக்க மனமில்லை..! ஜி.கே வாசன் கண்டனம்...
 
ஏப்ரல் 22, 23ம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments