Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை- - தலைமைச் செயலாளர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை- - தலைமைச் செயலாளர் அறிவிப்பு

sinoj

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (22:50 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தல் நாளில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று தமிழ் நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
 
அதில், தமிழத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை என்று தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை!- அமைச்சர் மனோதங்கராஜ்