Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சலுக்கு மீண்டும் சிக்கலா? சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (12:38 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் பல தடைகளை தாண்டி ஒருவழியாக இன்று காலைதான் சென்சார் சான்றிதழே கிடைத்துள்ளது. எனவே இந்த படம் நாளை வெளியாவது 100% உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்து மக்கள் கட்சியினர் திடீரென 'மெர்சல்' படம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.



 
 
மெர்சல்' படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிக விலையில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.
 
இந்த புகார் மீது சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் மெர்சலுக்கு மீண்டும் பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சம் விஜய் ரசிகர்களிடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது., மேலும் 'மெர்சல்' டிக்கெட்டுக்கள் ரூ.1200 விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments