Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஸ்பாட் ஃபைன்: பிரான்ஸ் அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (11:57 IST)
தெருவீதிகளில் பெண்களை கேலி, கிண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களுக்கு உடனடியாக ஸ்பாட் ஃபைன் விதிக்க பிரான்ஸ் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.



 
 
சாலைகளில் செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் காலதாமதம் ஆகின்றது. ஒருசிலர் இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பித்தும் விடுகின்றனர்.
 
இந்தநிலை தொடராமல் இருக்க பெண்களை கிண்டல் செய்வது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ஸ்பாட் ஃபைன் போடும் புதிய சட்டம் ஒன்றை பிரான்ஸ் அரசின் பெண்கள் நல அமைச்சர் கொண்டு வந்துள்ளார். இதற்கு அந்நாட்டு அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
 
இந்த சட்டத்தை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நடிகை ராதிகா இந்த சட்டம் நல்ல ஐடியா என்றும், இதை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்