Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்யாது: நீதிபதிகள்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (11:23 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நீதிமன்றம் குறித்தும் காவல்துறையினர் குறைத்தும் சர்ச்சைக்குரிய  வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனால் எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளனர். எனவே எச்.ராஜா எந்த நேரமும் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நீதிமன்றம் குறித்து தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்த எச்.ராஜாவை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் "எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments