Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் பலத்த காற்று... மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (16:21 IST)
சமீப காலமாகவே, தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து, கோடையில் காய்ந்துபோன நிலத்தைக் குளிர்வித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பச்சலனத் தாக்கத்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்,நீலகிரி கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட  மற்றும் புதுவை  ஆகிய இடங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
வங்கடலின் ஒரு பகுதியான மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசிவருவதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments