Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
புதன், 11 டிசம்பர் 2024 (09:50 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை மற்றும் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையும், 16 மற்றும் 17 ஆகிய ஐந்து நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக 13, 16, 17 ஆகிய தினங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments