Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - பருவமழை தீவிரம்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (16:32 IST)
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள தால் தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
 
தமிழகம், புதுச்சேரி கடல்பகுதியில் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ.வேகத்தில் அவ்வப்போது பலத்தகாற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஜூன் 30-ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த கடந்த 24 மணிநேரத்தில் சின்னக் கல்லார் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) பகுதிகளில் ஆறு செ.மீ., பாப நாசம் (திருநெல்வேலி), திருப்பத்தூர் (வேலூர்) ஆகிய இடங்களில் தலா ஐந்து செ.மீ., நீலகிரி மாவட்டம் ஜி.பஜார் பகுதியில் நான்கு செ.மீ., பொள் ளாச்சியில் மூன்று செ.மீ., மழை பெய்துள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பூதப்பாண்டி, மயிலாடி, குழித் துறை, தக்கலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் தலா இரண்டு செ.மீ., மழை பெய்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் கூடும் இடங்களில் இனி வரும் காலங்களில் கவனம் செலுத்துங்கள்! - நடிகர் விஜய் கோரிக்கை!

மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்குப் பிறகு 18 டன் குப்பை அகற்றம்… பணியில் ஈடுபட்ட 128 தூய்மைப் பணியாளர்கள்!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு..!

விமான சாகச நிகழ்ச்சி: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறுவனை கவ்விச் சென்ற ஓநாய்! அடித்தே கொன்ற கிராம மக்கள்! - உ.பியில் தொடரும் பீதி!

அடுத்த கட்டுரையில்
Show comments