Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலையில் ராம்குமாருக்கு யாரேனும் உதவினார்களா? : கமிஷனர் தகவல்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (16:15 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்த ராம்குமாருக்கு, அவரது நண்பர்கள் யாரேனும் உதவியுள்ளார்களா என்ற கேள்விக்கு சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் பதிலளித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 
 
இந்த கொலையில் ராம்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளாரா அல்லது அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. 
 
இந்நிலையில், சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆணையர் “இந்த கொலையில் ராம்குமார் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவருடைய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசனை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. எம்பி ஆகிறார் உலக நாயகன்..!

குமாஸ்தா வேலையை மட்டும் பாருங்க.. கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க! - தேர்தல் ஆணையத்திற்கு சி.வி.சண்முகம் கண்டனம்!

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு: 12 கேள்விகளை முன் வைத்த உச்ச நீதிமன்றம்..!

வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்..!

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments