Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலையில் ராம்குமாருக்கு யாரேனும் உதவினார்களா? : கமிஷனர் தகவல்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (16:15 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்த ராம்குமாருக்கு, அவரது நண்பர்கள் யாரேனும் உதவியுள்ளார்களா என்ற கேள்விக்கு சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் பதிலளித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 
 
இந்த கொலையில் ராம்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளாரா அல்லது அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. 
 
இந்நிலையில், சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆணையர் “இந்த கொலையில் ராம்குமார் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவருடைய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

கட்டுக்கடங்காத கூட்டம்.. டிக்கெட் இல்லாமல் மெட்ரோவில் பயணம் செய்த பொதுமக்கள்..!

100 ரூபாயை தாண்டிய தக்காளி விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

சர்வர் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த இந்தியர்கள்.. நிலை மாறிய கனடா..!

இனியாவது தவிர்க்க வேண்டும்: விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments