கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (10:31 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் தரிசனத்திற்காக 20 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வரும் நிலையில், பள்ளி விடுமுறை, ஆண்டு இறுதி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை அன்றே பக்தர்கள் பலர் குவிந்ததால் இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இன்று சனிக்கிழமை என்பதால் விடியற்காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். திருப்பதியில் அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில், குளிரும் வாட்டி வருகிறது. ஆனால் பக்தர்கள் அதையும் தாண்டி மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

 

நேற்று 66,715 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், 24,503 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் வசூல் ரூ.4.06 கோடியாக வசூலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments