அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (07:57 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் பத்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் நீலகிரி கோவை தேனி தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments