Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் கனமழை.. குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 20 மே 2024 (11:45 IST)
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மானகிரி கபிலர் தெருவில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர். அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெறும் நிலையில், கண்மாய் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
எனவே கண்மாயில் கலக்க வேண்டிய மழை நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், மழை நீரை விரைந்து வெளியேற்றினர். தற்போது அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக மதுரை உள்பட தென் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. 
 
இதன் காரணமாகத்தான் கனமழை பெய்த பகுதிகளில் உடனடியாக மீட்பு படையினர் சென்று தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments