Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னையில் இறங்க முடியாமல் வானில் வட்டமிடும் விமானங்கள்..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:42 IST)
சென்னையின் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும் குறிப்பாக விமான நிலையம் பகுதியில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னை புறநகர் பகுதியில் கடந்த சில ஆண்டு நிமிடங்களாக கன மழை பெய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இதனால் மூன்று உள்நாட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இன்னும் சில நிமிடங்கள் மழை தொடர்ந்து நீடித்தால் திருச்சியில் இருந்து 62 பயணிகளுடன் வந்த விமானம், கொச்சியில் இருந்து 127 பயணிகளுடன் வந்த விமானம், மைசூரில் இருந்து 52 பயணிகளுடன் வந்த விமானம் ஆகியவை பெங்களூருக்கு திருப்பி விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து வந்த விமானம் மட்டும் மீண்டும் திருச்சிக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments