Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் காத்திருக்கிறது செம மழை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Prasanth Karthick
புதன், 11 செப்டம்பர் 2024 (11:12 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல சுழற்சியால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பொழிவு ஓரளவு இருந்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments