வங்கக்கடல் சுழற்சி: இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; நாளையும் மழை பெய்யும்..!

Mahendran
திங்கள், 13 அக்டோபர் 2025 (15:07 IST)
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
 
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கீழ்க்கண்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:
 
திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி.
 
நாளை  நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டம் நடத்த அம்மன் கோவில் இடம் தேர்வு.. அறநிலையத்துறை அனுமதிக்குமா?

தங்கம் விலை மீண்டும் உச்சம்... இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

நேற்று மதியத்திற்கு மேல் உயர்ந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் நிலவரம்..!

சென்னையில் சுரங்க பாதையில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்.. போக்குவரத்து பாதிப்பு!

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments