Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்ல.. எங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேணாம்! – தயங்கும் முன்கள பணியாளர்கள்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (14:43 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முன்கள பணியாளர்கள் சிலர் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என மறுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது.

முதலாவதாக இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களின் விவரங்களும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல தனியார் மருத்துவமனை பணியாளர்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் என்றும், தாங்கள் எந்த வித கொரோனா அறிகுறியும் இன்றி ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments