இப்படித்தான் கூவ வேண்டும் : கமல்ஹாசனுக்காக தயாரான துண்டு பிரசுரம்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (08:14 IST)
நேற்று தொண்டர்கள் முன் கமல்ஹாசன் பேசிய போது அவரை புகழ்ந்து பாட தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார். அப்போது அங்கு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கூடியிருந்தனர்.
 
அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை அவர் அறிவித்தார். அப்போது, அவரை வாழ்த்தி எப்படி கோஷம் போட வேண்டும் என துண்டு பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டு தொண்டர்களிடம் நிர்வாகிகள் கொடுத்திருந்தனர்.
 
ஒருவர் இப்படி சொல்ல அதைக்கேட்டு மற்றவர்கள் எப்படி சேர்ந்து சொல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க.. ஆள வாங்க என மொத்தம் 8 கோஷங்கள் அதில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
 
இந்த துண்டு பிரசுரங்களை காட்டி கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுபற்றி இங்கே பேச வேண்டாம். வேறொரு இடத்தில் பேசுவோம் எனக்கூறிவிட்டு கமல் அங்கிருந்து சென்று விட்டார்.

இது நிர்வாகிகள் செய்த செயல்தான் என்றாலும், இதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் கமல்ஹாசனே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments