Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் வெடிக்க இருக்கும் டைம்பாம்: எச்.ராஜா சூசகம்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (16:24 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.
 
தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்தது.
 
இதனையடுத்து தினகரனின் வெற்றி ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும், அது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி எனவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரனின் வெற்றி செல்லுமா என்பது கூட சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
 
கடந்த 29-ஆம் தேதி எம்எல்ஏவாக சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்ட தினகரன் தனது முதல் சட்டசபை கூட்டத்தில் வரும் 8-ஆம் தேதி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தினகரனின் வெற்றி குறித்து சூசகமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
 
தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம் என சூசகமாக எச்.ராஜா கூறியுள்ளது அரசியல் வட்டாராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments