Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாத்தாவை வெட்டிக் கொன்ற பேரன்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (09:13 IST)
சென்னையில் சொத்து பிரிக்கும் தகராறில் நாகராஜ் என்பவர் அவரது தாத்தாவை வெட்டிக் கொன்றார்.


 

 
சென்னை எண்ணூர் பகுதியில் பகுதியில் சபாபதி(75) என்பவர் அவரது மூத்த மகள் பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். அவர்கள் பெரியவர்கள் ஆன நிலையில் மூத்த பேரன் நாகராஜ் என்பவர் அவரது தாத்தாவிடம் சொத்துகளை பிரித்து தருமாறு வெகு நாட்களாக பிரச்சனை செய்து வந்துள்ளார்.
 
இதனால் சபாபதி, தனக்கு பேரன் நாகராஜால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சபாபதி வீட்டுக்குச் சென்ற நாகராஜ் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது நாகராஜ் திடீரென்று அரிவாளால் சபாபதியை வெட்டியதில், சபாபதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
இதையடுத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments