கரூரில் நடந்தது என்ன? தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுனர் ஆர்.என். ரவி..!

Siva
ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (11:44 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் விளக்கத்தை ஆளுநர் கோரியுள்ளதாக தெரிகிறது.
 
ஏற்கனவே, இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் அறிக்கை கோரிக்கை குறித்து தமிழக அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments