Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆய்வு நடத்த ஆளுனருக்கு அதிகாரம் உள்ளது உண்மைதான், ஆனால்...வைகோ சொல்ல வருவது என்ன?

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (11:24 IST)
ஆளுனருக்கு ஆய்வு நடத்த அதிகாரம் உள்ளது என்பது உண்மைதான், ஆனால் இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
தமிழக ஆளுனர் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருவது பெரும் சர்ச்சையாக இருந்து வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் ஆளுனரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும் என்றும், அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; அந்த அதிகாரம் இந்தியாவில் இல்லை என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 
 
மேலும் தொழில் முனைவோர் தன்னை சந்திக்கலாம் என்ற ஆளுநருக்கு எந்த சட்டப்பிரிவில் அதிகாரம் உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆளுனரின் பணியை பாதிக்கும் வகையில் போராட்டம் செய்வோர்களுக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் என்று சட்டப்பிரிவில் உள்ளதாக ஆளுனரின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments