Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வம்படியாக வாயை விட்டு மாட்டிக் கொண்ட எடப்பாடியார் - போராட்டத்தில் குதித்த ஜாட்கோ ஜியோ அமைப்பினர்

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (08:53 IST)
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களை விமர்சித்து பேசியதற்காக ஜாட்கோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலில் நேற்று காலை கோவில் கும்பாபிஷேகம் ஒன்றில் பங்கேற்றார். பின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்றார்.
 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த மாபெரும் இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது என்றார்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் விமர்சித்துப் பேசியதாக தெரிகிறது. இதனால் கொந்தளித்த ஜாட்கோ - ஜியோ அமைப்பினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நின்று போராட்டம் நடத்தினர்.
ஒரு மாநில முதல்வரே அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசலாமா என கோஷமிட்டப்டி போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments