Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஏரியில் தங்க சிலைகள்...

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (20:40 IST)
சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் தங்க சிலைகள் கிடப்பதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மக்கள் அந்த பகுதியில் குவியத்துவங்கினர். 
 
தகவல் அறிந்து தாசில்தார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினரும் அங்கு விரைந்தனர். இதனையடுத்து ஏரியில் இருக்கும் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். 
 
ஏரியில் இருந்து 11 சாமி சிலைகளை வெளியே எடுத்து மீட்டனர். அவை தங்க வண்ணத்தில் பளபளப்புடன் இருந்தன. இதனால் மக்கள் அதை தங்க சிலை என எண்ணினர். ஆனால், சோதனை செய்து பார்த்த போது அவை உண்மையான தங்கத்திலான சிலைகள் இல்லை என்பது தெரியவந்தது. 
 
தங்க சிலைகள் என்று நினைத்து கொள்ளை கும்பல் ஏதாவது கோயிலில் இருந்து இந்த சிலைகளை கொள்ளையடித்து வந்து இருக்கலாம் எனவும், அவை சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலைகள் என்பது தெரிந்ததும் அதனை ஏரியில் வீசிவிட்டு தப்பியோடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments