Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாக்டவுன் திருமணம்... தற்கொலை செய்துக்கொண்ட +2 மாணவி!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (15:30 IST)
மதுரையில் ஊரடங்கை பயன்படுத்தி தாய்மாமனுடன் திருமணம் +2 மாணவிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை. 

 
மதுரை பாண்டிகோவில் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த் - தாமரைசெல்வி தம்பதியினரின் மூத்த மகளான அபிநயா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் மூலமாக படித்துகொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் மாணவியின்  விருப்பமின்றி தாய் மாமனுடன் திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
 
இதனையடுத்து மாணவி தனக்கு விருப்பமின்றி திருமணம் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல்துறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை  அழைத்து அறிவுரை கூற அனுப்பிவைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கிய நிலையில் உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். 
 
இந்நிலையில் நேற்று தனது வீட்டிற்கு மாணவி திரும்பிய நிலையில் திடிரென அவரது அறை திறக்கப்படாத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றநிலையில் மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு உடலை வீட்டிற்கு எடுத்துசென்ற நிலையில் போலிசார் உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 
 
மாணவியின் தற்கொலை குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அண்ணாநகர் போலிசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஊரடங்கை பயன்படுத்தி பள்ளி மாணவிக்கு திருமணம் நடத்த முயன்றதால் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஊரடங்கை பயன்படுத்தி குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதால் அதனை தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தனிப்பிரிவை உருவாக்கி புகார்களை ரகசியமாக பெற வேண்டும் எனவும் மகளிர அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments