Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் சண்டையால் மனமுடைந்த மகள் எடுத்த விபரீத முடிவு – அண்ணை, தங்கை பலி !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (10:41 IST)
பெற்றோர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்ததால் மனமுடைந்த மகள் கிணற்றில் விழ, அவரைக் காப்பாற்ற சென்ற அண்ணனும் இறந்துள்ளனர்.

கோவை மதுக்கரை பகுதியில் சேர்ந்த தம்பதிகள் முத்துசுவாமி மற்றும் வேலுமணி. இவர்களுக்கு சித்ரா என்ற மகளும் அருண்குமார் என்ற மகனும் உள்ளனர். விவசாயம் செய்துவரும் முத்துசுவாமி வயல் வேலைகள் தொடர்பாக தனது மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் மகள் சித்ரா, இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்தாததால் மனமுடைந்த சித்ரா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த அவரது சகோதரர் அருண்குமார் அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments