Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவடை சமயத்தில் கஜா புயல்: இந்த ஆண்டு கரும்பு இல்லா பொங்கலா?

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (19:27 IST)
கரும்பு விவசாயிகள் கடந்த சில மாதங்களாக கண்ணும் கருத்துமாக பயிர் செய்த கரும்பு, சமீபத்தில் வீசிய கஜா புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி கிட்டத்தட்ட இருக்காது என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்டா பகுதியின் கரும்பு விவசாயி ஒருவர் கூறியபோது, ' கடந்த சில நாட்களுக்கு முன் வரை கரும்பு நன்கு வளர்ந்திருந்ததாகவும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கரும்பு அறுவடை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் கஜா புயல் வந்து தங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டதாகவும் கண்ணீர்மல்க கூறினார். மேலும் புயல் காற்று காரணமாக ஒட்டுமொத்த கரும்புகளும் அடித்து சென்று விட்டதால் விளைந்த கரும்புகள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு அனுப்பவும், சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பவும் திட்டமிட்டிருந்த கரும்புகள் அனைத்தும் பாழாகிவிட்டதாகவும், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டதாகவும் பல கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு சரியான நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments