Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகை எவ்வளவு? – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (14:02 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் பலர் பணம் செலுத்திய நிலையில் இதுவரை எவ்வளவு நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு விருப்பம்போல நிதி அளிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியளித்தனர்.

இந்நிலையில் இதுவரை முதல்வர் நிவாரண நிதியில் கிடைக்குள்ள மொத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.56 கோடியுமாக மொத்தம் ரூ.69 கோடி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments