Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: ஆளுனருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுமா?

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (07:30 IST)
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளதை அடுத்து ஒரு சில கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூற வேண்டும் என ஆளுநர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரைக்கு பின் ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய ஆளுநர் உரையில் அரசின் நலத்திட்டங்கள், மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ள முக்கிய திட்டங்கள் ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து எம்.எல்..ஏக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments