இன்று முதல் தொடங்கும் ஊரடங்கில் எவை எவைகளுக்கு அனுமதி இல்லை!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (10:07 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு போக்குவரத்து அனுமதி இல்லை என்றும், மத்திய விமானத்துறை அமைச்சகம் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்கள் தவிர வேறு விமானங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சினிமா தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் பார்கள், நீச்சல் குளங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் எந்த விதமான விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உயிர் இல்லை பூங்காக்களும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற அனைத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அடுத்த கட்டுரையில்
Show comments