Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Prasanth Karthick
ஞாயிறு, 30 ஜூன் 2024 (11:45 IST)
காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கும் கடும் வெயில் வீசக்கூடும் என அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.



உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை பெருமளவில் மாறி வருவதுடன், தட்பவெட்ப நிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் மக்கள் அவதிக்குள்ளாக தொடங்கியுள்ளனர். காடுகளை அழித்தல், நகர மயமாக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த பருவநிலை மாற்றம் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தொடர் நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் தமிழக நகரங்கள் உட்பட மொத்தம் 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளில் வெப்பநிலை தற்போது உள்ளதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய வெப்பநிலையே தாங்க முடியாத வண்ணம் உள்ள நிலையில் எதிர்காலத்தில் மக்கள் பலரும் சூரிய வெப்ப அலையால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

ALSO READ: தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

எதிர்காலங்களில் தமிழக வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெப்பம் பதிவாகும் என்றும், தூத்துக்குடி, திருநெல்வெலி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை இரண்டு மடங்காக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதனால் வருடத்தில் 8 மாதங்கள் வரை கடுமையான வெயிலையும், மீத காலங்களில் அதிகமான மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments