Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 14 டிசம்பர் 2024 (11:45 IST)
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மன்னார்குடி வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை உருவானதாகவும் இதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து டிசம்பர் 17ஆம் தேதிக்கு தமிழகத்தில் ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 17ஆம் தேதி 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை தமிழகத்தின் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மிக கனமழை எச்சரிக்கையும் இந்திய மாநில ஆய்வு மையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments