Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபரை கடத்தி மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (22:53 IST)
வேலூர் அருகே 21 வயது வாலிபர் ஒருவரை கடத்தி 17 வயது மைனர் பெண்ணுக்கு பெண்ணின் பெற்றோரே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே உள்ள ஜோலார்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கு காதல் மலர்ந்தது. ஆனால் ஜாதியை காரணம் காட்டி சதீஷின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெற்றோரின் பேச்சை கேட்டு சுமதியை சதீஷ் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தன்னை காதலித்துவிட்டு தற்போது சதீஷ் கைவிட நினைப்பதாக அவர் தனது பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியான பெற்றோர் இரவோடு இரவாக சதீஷை கடத்தி வந்து சுமதிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சதீஷின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்கள் மகனை கடத்தி மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சுமதியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் புகாரில் சதீஷின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments