Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழை: தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..!

Mahendran
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (13:47 IST)
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கன அடி நீர் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் கால்நடைகளையும் இறக்க வேண்டாம் என்றும் ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் இருந்த பெருமழை , வெள்ளம் குறித்த ஆபத்து இல்லை என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments