Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12000 கன அடி நீர் திறப்பு: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (07:38 IST)
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 9,890 கன அடியாக உயர்ந்து உள்ளதாகவும், 35 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் 34.68 அடி எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை நீர் அதிகரிப்பு காரணமாக படிப்படியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அளவு உயர்ந்ததாக நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments