Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:01 IST)
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தகவலின்படி யார் யாருக்கு புதிதாக கொரோனா தொற்று இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்
 
1. சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் கன்னியாகுமரியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
2. சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
3.கன்னியாகுமரியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
4. சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 85 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
5. சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ள கழிப்பட்டூர் என்ற பகுதியை சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
தமிழகத்தில் ஏற்கனவே 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments